கோவையில் நாய்க்கு விஷம் வைத்து தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டி திருடிச் சென்ற மர்ம நபர்கள்..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் நாய்க்கு விஷம் வைத்து தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டி திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் நாய்க்கு விஷம் வைத்து தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டி திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியை சேர்ந்த குருநாதன்(50).

விவசாயம் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான தோட்டத்தின் ஒரு பகுதியில் விவசாயம் செய்து வரும் இவர், மற்றொரு பகுதியை ஆட்டு பண்ணை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இவரது தோட்டத்தில் 40 மற்றும் 15 வருடங்களான சந்தன மரங்கள் உள்ளன.

இந்நிலையில், இன்று அதிகாலை தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு சந்தன மரங்களை வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வெட்டப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு மூன்று லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினரின் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று சந்தன மரத்தை வெட்டி, திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...