கோவையில் நாய்க்கு விஷம் வைத்து தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டி திருடிச் சென்ற மர்ம நபர்கள்..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் நாய்க்கு விஷம் வைத்து தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டி திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் நாய்க்கு விஷம் வைத்து தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டி திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியை சேர்ந்த குருநாதன்(50).

விவசாயம் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான தோட்டத்தின் ஒரு பகுதியில் விவசாயம் செய்து வரும் இவர், மற்றொரு பகுதியை ஆட்டு பண்ணை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இவரது தோட்டத்தில் 40 மற்றும் 15 வருடங்களான சந்தன மரங்கள் உள்ளன.

இந்நிலையில், இன்று அதிகாலை தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு சந்தன மரங்களை வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வெட்டப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு மூன்று லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினரின் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று சந்தன மரத்தை வெட்டி, திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...