ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், 16ம் தேதி அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது - கோயில் நிர்வாகம் அறிவிப்பு

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், 16ம் தேதி அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது, என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், 16ம் தேதி அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது, என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள், அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில், கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட மாசாணியம்மன் கோயில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கட்டுப்பாடுகளுடன் செயல்பட தொடங்கியது. பக்தர்கள் பூஜை பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான அமாவாசை நாளை 16ம் தேதி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, அமாவாசை அன்று இரவு கோயில் நடை திறக்கப்படாது என, கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமாவாசை அன்று, வழக்கம்போல் பக்தர்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை அம்மனை தரிசிக்கலாம் என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...