கோவையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளியான திலக் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்!

கோவை: கோவையில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திலக் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


கோவை: கோவையில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திலக் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த மாதம் 30-ம் தேதி கோவை வைசியாள் வீதியில் வீட்டியல் தனியாக இருந்த மூதாட்டி தனலட்சுமி கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 80 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தனலட்சுயின் வீட்டுக்கு பக்கத்து தெருவில் வசித்து வந்த லதா மற்றும் மாலா என இரு சகோதரிகள் பீளமேடு பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் மனோஜ், செல்வம், ஆட்டோ ஓட்டுநர் சத்தியசீலன் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, மூதாட்டியை திட்டம் தீட்டி கொலை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான லதாவின் சகோதரரான திலக் என்பவரை போலீசார் சென்னை மற்றும் திருப்பதியில் முகாமிட்டு தேடி வந்தனர்.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திலக் இன்று சரணடைந்தார். இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்றுள்ள போலீசார், திலக்கை கோவை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திலக்கை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என போலீசார் கருதுகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...