கோவை: கோவை செட்டிபாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை செட்டிபாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் வைரபிரகாசம்(40). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் மற்றும் வைதபிராகசம் என்பவர் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சிவபிரகாசத்தை சந்திக்க வந்த அவரது நண்பரான நவக்கரை பகுதியை சேர்ந்த பிரதாப்(44) அங்கேயே தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு வைரபிரகாசம் மற்றும் பிரதாப் இருவரும் பொள்ளாச்சி சாலை பகுதியில் உள்ள மதிவாணனின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மூவரும் மது அருந்தி உள்ளனர்.
அப்போது, குடிபோதையில் பிரதாப்பிற்கும் மதிவாணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதில், பிரதாப் மதிவாணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதிவாணன் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து பிரதாப்பின் தலையில் ஓங்கி அடித்ததில் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வைரபிரகாசம் பிரதாப்பை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார். பலத்த காயம் அடைந்த பிரதாப் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், இதுகுறித்து வைரபிரகாசம் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள செட்டிபாளையம் போலீசார் மதிவாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் வைரபிரகாசம்(40). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் மற்றும் வைதபிராகசம் என்பவர் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சிவபிரகாசத்தை சந்திக்க வந்த அவரது நண்பரான நவக்கரை பகுதியை சேர்ந்த பிரதாப்(44) அங்கேயே தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு வைரபிரகாசம் மற்றும் பிரதாப் இருவரும் பொள்ளாச்சி சாலை பகுதியில் உள்ள மதிவாணனின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மூவரும் மது அருந்தி உள்ளனர்.
அப்போது, குடிபோதையில் பிரதாப்பிற்கும் மதிவாணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதில், பிரதாப் மதிவாணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதிவாணன் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து பிரதாப்பின் தலையில் ஓங்கி அடித்ததில் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வைரபிரகாசம் பிரதாப்பை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார். பலத்த காயம் அடைந்த பிரதாப் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், இதுகுறித்து வைரபிரகாசம் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள செட்டிபாளையம் போலீசார் மதிவாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.