திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பள்ளி மைதான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பள்ளி மைதான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட குமாரபாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் தான் அமர்ந்து படிக்கவும் , மாலை நேரங்களில் விளையாடவும் முடிந்து வருகிறது. பள்ளி மைதானம் இல்லாத சூழ்நிலையில், பள்ளிக்கு வெளியில் உள்ள இடத்தை முத்துசாமி என்பவர் வருவாய் துறை அதிகாரிகளின் துணையுடன் பட்டா தயார் செய்த ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அப்படி தனிநபர் ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பள்ளிக்கு தேவையான ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கு இடமில்லாமல் போகும் என்பதால் இதனை தடுத்து நிறுத்தி பள்ளிக்கு சொந்தமான இடத்தை பள்ளிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட குமாரபாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் தான் அமர்ந்து படிக்கவும் , மாலை நேரங்களில் விளையாடவும் முடிந்து வருகிறது. பள்ளி மைதானம் இல்லாத சூழ்நிலையில், பள்ளிக்கு வெளியில் உள்ள இடத்தை முத்துசாமி என்பவர் வருவாய் துறை அதிகாரிகளின் துணையுடன் பட்டா தயார் செய்த ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அப்படி தனிநபர் ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பள்ளிக்கு தேவையான ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கு இடமில்லாமல் போகும் என்பதால் இதனை தடுத்து நிறுத்தி பள்ளிக்கு சொந்தமான இடத்தை பள்ளிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.