கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் எல்முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே சி கருணாகரன் (74) சற்று முன் காலமானார்.
கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் எல்முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே சி கருணாகரன் (74) சற்று முன் காலமானார்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் இருந்துள்ளார் எனவும் இன்று, காலை, அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் மனைவி, காலமானார், என்பது குறிப்பிடத்தக்கது.
23 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பிறராகவும், 1997 முதல் 2001 வரை சிபிஎம் மாவட்ட செயலாளராகவும், 2001 முதல் 2006 வரை சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், சோசலிஸ்ட் வாலிபர் சங்கத்தின் முதல் மாநில தலைவராகவும் அவர் பணியாற்றியவர்.
அவரது, உடல் சணிக்கிழமை காலை 9 மணிவரை உப்பிலியபாளையத்தில் உள்ள அவரது இல்லத்திலும், 9.30 மணியில் இருந்து 12 மணிவரை சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தொடர்ந்து, மதியம் 12:30 மணிக்கு பாப்பநாயக்கண்பாளைய மின் மயாணத்தில் அவர் உடல் தகனம் செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.