திருப்பூரில் முக கவசம் அணியாமல் வந்தவரிடம் அபராதம் விதிக்கும் போது ஜாதி பெயரை கேட்ட சம்பவம்: விசாரணை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சியர் உறுதி

திருப்பூர்: திருப்பூரில் முக கவசம் அணியாமல் வந்தவரிடம் அபராதம் விதிக்கும் போது ஜாதி பெயரை கேட்டதால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து, விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூரில் முக கவசம் அணியாமல் வந்தவரிடம் அபராதம் விதிக்கும் போது ஜாதி பெயரை கேட்டதால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து, விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், முகக் கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 



இந்நிலையில், திருப்பூர்-பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவரிடம், பெருமாநல்லூர் ஆயுதப்படை காவலர் காசிராஜன் அபராதம் விதிக்க, அவருடைய விபரங்களை சேகரிக்கும் போது, சாதி பெயரை கேட்டுள்ளார். 

அதில், ஆத்திரம் அடைந்த அந்த நபர், அபராதம் விதிப்பதில் தப்பில்லை ஆனால், எதற்காக சாதி பெயரை கேட்கறீங்கள்..? என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, தவறு செய்பவர்களின் விவரங்களை சேகரிக்கும் பொது, ஜாதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுவது வழக்கம். 

ஆனால், காவலர் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் சாதி பெயர் கேட்பது விமர்சனத்துக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து, பெருமாநல்லூர் காவல்நிலைய பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் காசிராஜனை மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் உத்தரவிட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...