கோவை: கோவை சாடிவயல் அருகே விவசாயிகளுடன் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அங்கு நடவு செய்யும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
கோவை: கோவை சாடிவயல் அடுத்த கல்குத்திபதி கிராமத்தில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அங்கு நடவு செய்யும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மத்திய மாநில அரசுகளின் சலுகைகளுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாடிவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, சாடிவயல் அடுத்த கல்குத்திபதி கிராமத்தில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறித்தும் அங்கு நடவு செய்யும் பயிர் வகைகள் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அத்தனை தேவைகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.