கோவையில் சோடா கடை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - மாநகர காவல் ஆணையர் உத்தரவு

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக சோடா கடை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.









கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக சோடா கடை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பிஜு (40). இவா் ராம் நகரில் சோடா கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சோ்ந்த ஆறுமுகம் என்பவரின் மகனான நிதீஷ்குமாரை, ராம் நகரைச் சோ்ந்த சிலா் கத்தியால் குத்தினா். இதையடுத்து, நிதீஷ்குமாா் மீதான தாக்குதலுக்கு பிஜு தான் காரணம் என நினைத்த, அவரது ஆதரவாளா்கள் அவரைக் வெட்டிக் கொலை செய்தனா். 

இது குறித்து காட்டூா் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அருண் பிரசாத், விவேக் பிரபு, இளையராஜா, அரவிந்த், பிரவீன், கார்த்திக், ஆறுமுகம், கோபால், சக்தி பாண்டி, பிரகாஷ் ஆகிய 10 பேரைக் கைது செய்தனா்.

மேலும், வழக்கின் முக்கிய எதிரியான ஆறுமுகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இதனையடுத்து, ஆறுமுகத்தை நான்கு நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 



இந்நிலையில் காட்டூர் காவல் ஆய்வாளர் லதா பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், குற்றவாளிகளில் ராஜா, அருண் பிரசாத், அரவிந்த், விவேக் பிரபு ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

இதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடம் காவல்துறையினர் இன்று வழங்கினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...