கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக சோடா கடை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக சோடா கடை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பிஜு (40). இவா் ராம் நகரில் சோடா கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சோ்ந்த ஆறுமுகம் என்பவரின் மகனான நிதீஷ்குமாரை, ராம் நகரைச் சோ்ந்த சிலா் கத்தியால் குத்தினா். இதையடுத்து, நிதீஷ்குமாா் மீதான தாக்குதலுக்கு பிஜு தான் காரணம் என நினைத்த, அவரது ஆதரவாளா்கள் அவரைக் வெட்டிக் கொலை செய்தனா்.
இது குறித்து காட்டூா் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அருண் பிரசாத், விவேக் பிரபு, இளையராஜா, அரவிந்த், பிரவீன், கார்த்திக், ஆறுமுகம், கோபால், சக்தி பாண்டி, பிரகாஷ் ஆகிய 10 பேரைக் கைது செய்தனா்.
மேலும், வழக்கின் முக்கிய எதிரியான ஆறுமுகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இதனையடுத்து, ஆறுமுகத்தை நான்கு நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் காட்டூர் காவல் ஆய்வாளர் லதா பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், குற்றவாளிகளில் ராஜா, அருண் பிரசாத், அரவிந்த், விவேக் பிரபு ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடம் காவல்துறையினர் இன்று வழங்கினர்.