கோவை முத்தண்ணன் குளக்கரையில் காலியாக இருக்கும் வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் துவங்கியது

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் காலியாக இருக்கும் வீடுகளை இடிக்கும் பணிகளை, மாநகராட்சி இன்று முதல் மீண்டும் துவங்கியது.


கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் காலியாக இருக்கும் வீடுகளை இடிக்கும் பணிகளை, மாநகராட்சி இன்று முதல் மீண்டும் துவங்கியது.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்து வந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்த, அக்குளக்கரையில் இருந்த வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வந்தது.

மேலும், அங்கு வசித்து வந்த மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழக்கப்பட்டுள்ளன. இதில், சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்ட நிலையில், அவர்களது வீடுகள் முதல் கட்டமாக இடிக்கப்பட்டது.

அதன் பின், தற்போது அங்கு காலியாக உள்ள 400 மேற்பட்ட வீடுகளை ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "முத்தண்ணன் குளத்தில் காலியாக உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. வரும் சனிக்கிழமைக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...