திருப்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்தாரா கிராமத்தில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், உத்தரப்பிரதேச மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.