பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடுப்பு பணிகளில் தனி கவனம் செலுத்தும் நடவடிக்கையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடுப்பு பணிகளில் தனி கவனம் செலுத்தும் நடவடிக்கையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நகராட்சியில் நடக்கும் சுகாதார பணிகளை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் (சென்னை) வடிவேலன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அவர் கூறுகையில், பொள்ளாச்சியில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆரம்ப நிலையில் தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், தெருத்தெருவாக, வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை, மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தவும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை முகாமில் பரிசோதனை செய்ய செய்யவும், அவ்வாறு தொற்று பாதித்தவர்களை கண்டறிந்ததும், காலதாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
காய்ச்சல் முகாமுடன், கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் விநியோகம் செய்ய வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அறிவுறுத்தினார்.

இதன் ஒரு பகுதியாக, நகராட்சியில் நடக்கும் சுகாதார பணிகளை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் (சென்னை) வடிவேலன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அவர் கூறுகையில், பொள்ளாச்சியில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆரம்ப நிலையில் தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், தெருத்தெருவாக, வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை, மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தவும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை முகாமில் பரிசோதனை செய்ய செய்யவும், அவ்வாறு தொற்று பாதித்தவர்களை கண்டறிந்ததும், காலதாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
காய்ச்சல் முகாமுடன், கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் விநியோகம் செய்ய வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அறிவுறுத்தினார்.