பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து திருப்பூரில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 36 பேருக்கும் விடுதலை வழங்கி உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிபதியின் உருவபொம்மையை எரித்து, திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 36 பேருக்கும் விடுதலை வழங்கி உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிபதியின் உருவபொம்மையை எரித்து, திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 48 பேரில் ஏற்கனவே 12 பேர் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த நிலையில் மீதமிருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 36 பேருக்கு நேற்றைய தினம் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை வழங்கி தீர்ப்பளித்தது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், உடனடியாக மத்திய அரசு உரிய ஆதாரங்களை திரட்டி மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் சி டி சி கார்னரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த யாதவின் உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...