உதகையில் கடைகள் மற்றும் வங்கிகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத கனரா வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்!

நீலகிரி: உதகையில் உள்ள கடைகள் மற்றும் வங்கிகளில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத கனரா வங்கிக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.


நீலகிரி: உதகையில் கடைகள் மற்றும் வங்கிகளில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத கனரா வங்கிக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நான்காயிரத்தை கடந்துள்ள நிலையில், மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இ.பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், உதகை நகராட்சி ஆணையர் சரஸ்வதி, சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள், மார்க்கெட், கமர்சியல் சாலை, மதுபான கடை, அரசு வங்கி போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது, உதகை மத்திய நகர பகுதியில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கி கொண்டு வரும் கனரா வங்கியில் பொது மக்கள் கூட்டம் அலை மோதியதால் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, வங்கி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களை எச்சரித்த நகராட்சி அதிகாரிகள், கனரா வங்கிக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும் கடை வீதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு ரூ.500 வீதம் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஆய்வில் அபராத கட்டணமாக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் அதிகாரிகள் வசூலித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...