கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 270 மூட்டைகளில் 12 டன் உரம் பறிமுதல் செய்த வருவாய் துறையினர் குடோனுக்கு சீல் வைத்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 270 மூட்டைகளில் 12 டன் உரம் பறிமுதல் செய்த வருவாய் துறையினர் குடோனுக்கு சீல் வைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் உர மூட்டைகளை பதுக்கி வைத்து, லாரி மூலமாக கடத்துவதாக சார் ஆட்சியர் வைத்தியநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்த சார்-ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததும், லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 270 மூட்டைகளில் இருந்த 12 டன் யூரியா உரத்தை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் வேளாண் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், லாரி ஓட்டுநர் கருப்பசாமியிடம் விசாரித்த போது, சோமனூர் பகுதியிலிருந்து உர மூட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து, கேரளாவிற்கு கடத்த முற்பட்டதும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, கேரளாவிற்கு கடத்தி சென்று பல மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, உர மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும், குடோன் உரிமையாளர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் உர மூட்டைகளை பதுக்கி வைத்து, லாரி மூலமாக கடத்துவதாக சார் ஆட்சியர் வைத்தியநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அங்கு விரைந்த சார்-ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததும், லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 270 மூட்டைகளில் இருந்த 12 டன் யூரியா உரத்தை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் வேளாண் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், லாரி ஓட்டுநர் கருப்பசாமியிடம் விசாரித்த போது, சோமனூர் பகுதியிலிருந்து உர மூட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து, கேரளாவிற்கு கடத்த முற்பட்டதும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, கேரளாவிற்கு கடத்தி சென்று பல மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, உர மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும், குடோன் உரிமையாளர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.