தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில், தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 580 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 580 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொடர்ந்து நடத்தப்படும் என தெரிகிறது. ஒரே நாளில் வேளாண்மைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது சக ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்துள்ளனர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர் எனவும் மீதமுள்ள ஊழியர்களுக்கான சோதனைகளை அதிகரிக்க பல்கலைக்கழகம் சார்பாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல, வேளாண் பல்கலையில் சோதனைகளை மேற்கொள்ளும் பி.என்.புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு 150 பி.சி.ஆர் சோதனை கருவிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், மற்ற ஊழியர்களுக்கான சோதனைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

மேலும், ஒவ்வொரு புதன்கிழமையும், சித்தா ஆலோசனை அனைத்து ஊழியர்களுக்கும் உள்ளக மருந்தகத்தில் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நோயெதிர்ப்பு மற்றும் சீரான ஆரோக்கியமான உணவு குறித்த ஆலோசனைகள் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் நாவலை எதிர்த்துப் போராடுவதில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கப்படும் என்று ரவிசந்திரன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...