முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை மோடி திட்டம் எனக்கூறி பாஜகவினர் பணம் வசூலித்ததாக திமுக இளைஞர் அணி சார்பில் மனு..!

கோவை: முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை மோடி திட்டம் எனக்கூறி பாஜகவினர் வசூலித்த தொகையை திரும்பபெற்று தரக்கோரி திமுக இளைஞரணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை மோடி திட்டம் எனக்கூறி பாஜகவினர் வசூலித்த தொகையை திரும்பபெற்று தரக்கோரி திமுக இளைஞரணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் மதுக்கரை வட்டத்திற்கு உட்பட்ட திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் ரேசன் கடை எண் 56 செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் மோடியின் ரூ.5 லட்சம் காப்பீட்டு திட்டத்தில் இணைப்பதாக கூறி தலா ரூ.50 என வசூலித்து வருகின்றனர். இதுவரை 200 பேரிடம் ரூ.50 என 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த இத்திட்டத்தை ஜெயலலிதா முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றினார். மேலும் இத்திட்டத்திற்காக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது என காப்பீட்டு அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக திருமலையாம்பாளையம் பகுதியிலுள்ள 15 வார்டுகளில் மோடி திட்டம் எனக்கூறி பாஜகவினர் வசூலில் ஈடுபட்டு வருவதை தடுக்கவும், அவர்கள் வசூல் செய்த தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...