திருப்பூரில் அடமானம் வைத்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூரில் அடமானம் வைத்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அடியாட்களுடன் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


திருப்பூர்: திருப்பூரில் அடமானம் வைத்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அடியாட்களுடன் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் பின்னலாடை சார்ந்த ஜாப் வொர்க் நிறுவனம் நடத்தி வருகிறார். இதற்காக கடந்த 2015ம் வருடம் முத்துசாமி என்பவரிடம் தனக்கு சொந்தமான 760 சதுர அடி நிலத்தை அடமானம் வைத்து மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

இதனிடையே, கடன் பெற்றது முதல் தவணைத் தொகை முறையாக செலுத்தி வந்த நிலையில், கடந்த ஊரடங்கு காலத்தில் மூன்று மாதமாக தவணைத் தொகை செலுத்தாத காரணத்தால் தற்போது அடியாட்களுடன் வந்து இடத்தை வேறு ஒருவருக்கு விற்பதாக கூறி தங்களை வெளியேறுமாறு வற்புறுத்தி வருகிறார்.

இது குறித்து ஏற்கனவே பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட லட்சுமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.



இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...