கோவை: கோவையில் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1500 அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1500 அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் ஊட்ட சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுதொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் மீனாட்சி கூறுகையில்,‘‘ கோவை மாவட்டத்தில் 1,690 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் இதுவரை, 1,500 அங்கன்வாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன. முருங்கை, பப்பாளி, கீரை வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர பஞ்சாயத்து இடங்களில் வேளாண் துறையுடன் இணைந்து, காய்கறி தோட்டம் அமைக்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் இடப்பரப்பளவிற்கு ஏற்ப இந்த காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து தொடர்பான விழிப்புணர்வு கிடைக்கிறது. மேலும், சுமார் 1500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குழந்தைகளின் ஊட்ட சத்து தொடர்பாக ஆய்வும் மேற்கொள்கின்றனர்," என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் ஊட்ட சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுதொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் மீனாட்சி கூறுகையில்,‘‘ கோவை மாவட்டத்தில் 1,690 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் இதுவரை, 1,500 அங்கன்வாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன. முருங்கை, பப்பாளி, கீரை வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர பஞ்சாயத்து இடங்களில் வேளாண் துறையுடன் இணைந்து, காய்கறி தோட்டம் அமைக்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் இடப்பரப்பளவிற்கு ஏற்ப இந்த காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து தொடர்பான விழிப்புணர்வு கிடைக்கிறது. மேலும், சுமார் 1500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குழந்தைகளின் ஊட்ட சத்து தொடர்பாக ஆய்வும் மேற்கொள்கின்றனர்," என்று தெரிவித்தார்.