கோவை: கோவை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கோவை: கோவை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. விலை குவிண்டாலுக்கு 335 ரூபாய் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 452 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர்.
முதல் தர கொப்பரை 238 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,550 -க்கும், அதிகபட்சம் ரூ. 11,635 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 214 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,555 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 7,550 -க்கும் விற்பனையானது. 14 வியாபாரிகள், 95 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
மேலும், கடந்த வாரத்தை விட 138 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 216 குவிண்டால் ரூ. 19 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ. 335 விலை அதிகரித்து உள்ளது’ என்று தெரிவித்தார்.
இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 452 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர்.
முதல் தர கொப்பரை 238 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,550 -க்கும், அதிகபட்சம் ரூ. 11,635 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 214 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,555 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 7,550 -க்கும் விற்பனையானது. 14 வியாபாரிகள், 95 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
மேலும், கடந்த வாரத்தை விட 138 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 216 குவிண்டால் ரூ. 19 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ. 335 விலை அதிகரித்து உள்ளது’ என்று தெரிவித்தார்.