கோவையில் சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவை: கோவையில் சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல்‌ கெளலிபிரவுன்‌ ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாவட்டத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும்‌ பணிகளான சாலை அமைக்கும்‌ பணிகள்‌, பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌, மின்சார புதைவடம்‌, கேபிள்கள்‌, 24X7 குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌, தொலைதொடர்பு கேபிள் அமைத்தல்‌, மழைநீர் வடிகால்‌ அமைக்கும்‌ பணிகள்‌, இருபுறமும்‌ பாதசாரிகள்‌ நடைபாதைகள்‌, அலங்கார தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌, ஒளிரும்‌ விளம்பர பலகைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ ஆகிய பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும், சாலை ஓரங்களில்‌ இருபுறங்களிலும்‌ கடைகளின்‌ முன்பு சாக்கடை கழிவுநீர் செல்லும்‌ கால்வாய்களில்‌ நீர் தேங்காமலும்‌ மற்றும்‌ கொசு உற்பத்தியை தடுக்கும்‌ வகையில்‌ கொசு மருந்துகளை தெளிக்கப்பட வேண்டும்‌ என சுகாதார அலுவலர்களிடம்‌ தெரிவித்தத ஆணையாளர்‌ அவர்கள்‌, இப்பணிகளை பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம்‌ பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும்‌, சீர்மிகு நகர பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது மாநகரப்பொறியாளா்‌ ஆ.லட்சுமணன்‌, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர்‌ வைதீஸ்வரன்‌, நகரமைப்பு அலுவலா்‌ ரவிச்சந்திரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுகந்தி, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சத்தியமூர்த்தி, குடிநீர் பிரிவு இளம்பொறியாளார்கள்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...