பொள்ளாச்சி அருகே பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் கொடுத்து கொரோனா விழிப்புணர்வு செய்த இளைஞர்!

கோவை: பொள்ளாச்சி அருகே பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் கொடுத்து கொரோனா விழிப்புணர்வு செய்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அருகே பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் கொடுத்து கொரோனா விழிப்புணர்வு செய்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பல நூற்றுக் கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒரு மாற்றத்தை உருவாக்கும் முனைப்போடு, பொள்ளாச்சி நகர் பகுதியில் வசிக்கும் நவீன்குமார் (28) ஆண்டுதோறும், ஏதோ ஒரு மாற்றத்தை சமூகத்தில் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தோடு தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.



அதேபோல், இந்த ஆண்டும் ஏதோ ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனும் எண்ணத்தில் தனது 28வது பிறந்தநாளான இன்று பொதுமக்களிடையே கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், பதாகைகளை ஏந்தியவாறு தனது நண்பர்கள் உதவியுடன், பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், கோவை சாலை, காந்தி சிலை சந்திப்பு பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும், அவர்களுக்கு கொரோனோ எனும் கொடிய நோயின் பாதிப்பு குறித்து விளக்கமளித்து தன் பிறந்தநாளுக்கு அவர்களிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பெற்று கொண்டார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...