நீலகிரி: பல்லுயுரி வளம் கொண்ட நீலகிரி மலைத்தொடரில் 130 ஆண்டுகளுக்கு பின் அரிதான வண்ணத்துப்பூச்சி ஒன்று பதிவு செய்யப்பட்டு இருப்பது வன உயிரி ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: பல்லுயுரி வளம் கொண்ட நீலகிரி மலைத்தொடரில் 130 ஆண்டுகளுக்கு பின் அரிதான வண்ணத்துப்பூச்சி ஒன்று பதிவு செய்யப்பட்டு இருப்பது வன உயிரி ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைகளாலும், வன உயிரிகளின் இருப்பிடமாகவும், பல்லுயிரிகள் வாழும் இடமாக இருப்பது நீலகிரி மாவட்டமாகும். அடிக்கடி மலை பெய்தாலும் பறவைகளும், பட்டாம் பூச்சிகளும் வாழ நல்ல சீர்தோஷ்ண நிலையினை கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்தவரை இன்னும் பதிவு செய்யப்படாத உயிரினங்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் புது புது உயிரினங்கள் வெளி உலகிற்கு வந்து கொண்டு இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், காடழிப்பு போன்ற அச்சுறுத்து நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளை உடனுக்குடன் காட்ட சூழ்நிலை காரணியாக வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. அதிகமாக வண்ணத்துப்பூச்சி உருவாகும் போது, வளமான காடுகள் உருவாவதாக அர்த்தம். இதன் மூலம் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் சீராக வைக்க உதவுகிறது. கிட்டத்தட்ட சங்கிலி போன்ற அமைப்பே இந்த பல்லுயுரி சூழ்நிலை மண்டலமாகும்.
இந்நிலையில், இந்தியாவில் அரிதின் அரிதாக காணப்படும் பிராண்டட் ராயல் (branded royal)(Tajuria melastigma) பட்டாம் பூச்சியை கோத்தகிரி மலை பகுதியில் புகைப்படம் எடுத்துள்ளார் விண்டர்-பிளைத் சங்கத்தின்( Wynter-Blyth Association)நிர்வாகியான வினோத் ஸ்ரீராமுலு.

இது குறித்து மேலும் அவரிடம் பேசிய போது, இந்த வகை வண்ணத்துப்பூச்சி இந்தியாவில் 1888ம் ஆண்டு ஜி. எஃப் ஹாம்சன் என்பவரால் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் 2020 ல் பதிவு செய்து இருக்கிறோம். நீலகிரி, திண்டுக்கல், கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பிராண்ட் ராயல் எனப்படும் வண்ணத்துப்பூச்சி மிக அறிய வகை இனமாகும். இவற்றை போலவே வேறு சில வகைகளும் உண்டு. அப்படி இருக்க இந்த வண்ணத்துப்பூச்சி முட்டையிடும் தாவரமும் அறிய வகையாகத்தான் இருக்கும்.
சுமார் 130 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட வண்ணத்துப்பூச்சியாக இருப்பதால் இப்பகுதியில் அவை வாழுவதற்கான சூழ்நிலை நிலவுகிறது. இது போன்ற அரிய உயிரினங்களும், அதை சார்ந்து இருக்கும் தாவரங்களும் காணப்படுவதால் அந்த பகுதியே வளமானதாக மாற வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவற்றை ஆய்வு செய்து பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.