குன்னூரில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டெருமை..! செல்ஃபி எடுக்க முயன்ற மாணவியை விரட்டியதால் பரபரப்பு!

நீலகிரி: குன்னூரில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டெருமை, செல்ஃபி எடுக்க முயன்ற மாணவியை ஆவேசமாக விரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: குன்னூரில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டெருமை, செல்ஃபி எடுக்க முயன்ற மாணவியை ஆவேசமாக விரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்ததால், குன்னூர் நகரப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகாமையில் புல் அதிகளவில் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.



இந்நிலையில், இதனை உண்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து மிகப்பெரிய காட்டெருமை ஒன்று, குன்னூர் காமராஜபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.



அப்போது, ஆர்வக்கோளாறு காரணமாக மாணவி ஒருவர் காட்டெருமையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது, காட்டெருமை ஆவேசமாக அந்த மாணவியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் இருந்த காட்டெருமை வீட்டின் முன்பகுதி கேட்டின் வழியாக வெளியே வந்து, அருகில் உள்ள நகராட்சி திட்டக்கழிவு மையத்திற்குள் புகுந்தது.

வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது இந்த காட்டெருமை ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனிடையே, அருகில் உழவர் சந்தை இருப்பதால் தினந்தோறும் ஏராளமான மக்கள் காய்கறி வாங்க வரும் நிலையில், மனிதர்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இந்த காட்டெருமையை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...