சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்; பொள்ளாச்சி ஆழியாரில் மக்கள் கூட்டமாக கூடுவதால் நோய் பரவும் அபாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வருவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வருவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளது, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, குரங்கு அருவி, டாப்சிலிப் உள்ளிட்ட இடங்கள் ஆகும். இதில் குறிப்பாக ஆழியார் அணை, குரங்கு அருவி, உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வருவது வழக்கம். 

கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு காரணமாக சுற்றுலா தடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலாத்தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  

இருப்பினும், பாதுகாப்பு கருதி ஆழியார் அணை, பூங்கா மற்றும் குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவதில்லை. 

இந்நிலையில், விடுமுறை நாளான இன்று ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள், முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சகஜமாக சுற்றித் திரிந்தனர். ஆழியார்  தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக குளித்து வருகின்றனர்.

 

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரானோ அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் இந்த அலட்சியப் போக்கால், நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொது மக்களுக்கு கடுமையான அபராதம் விதித்து, நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...