பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் பலி!

கோவை: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (38), தனியார் நிறுவனத்தில், மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்தார். இவருக்கு திருமணமாகி 9 வயது ஆண் குழந்தை உள்ளது. மேலும் இவரது மனைவி பவித்ராதேவி 9 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு கதிர்வேல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும் பொழுது, ஊஞ்சவேலம்பட்டி அருகே நிலைதடுமாறி ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் பின்புறம் இருசக்கர வாகனத்துடன் மோதினார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கதிர்வேல் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...