பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக இன்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக இன்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக இன்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால், ஆழியார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் ஆழியாறு, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் கடந்த 20ம் தேதி அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியதையடுத்து, அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக, 3,625 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.



இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,408 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மதியம் 2 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து திடீரென உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.70 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர் வரத்தைப் பொறுத்து, உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...