கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய சாட்சிகள் என்பதால் அரசு வேலை வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கக்கூடும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை த.வெ.க. தலைவர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இது திட்டமிட்டு நடந்த செயலா அல்லது விபத்தா என்பதற்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதுடன், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரும் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவும், அதற்கான ஆணையை விஜயே நேரடியாக வழங்கவும் நாளை (ஜூலை 10) கரூருக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க. சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய சாட்சிகளாக உள்ள அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடலாம். அதனால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போவதுடன், 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும்.
"அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" என்றும், அரசு வேலை வழங்குவது நீதிமன்ற விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ள டாக்டர் க. கிருஷ்ணசாமி, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...