வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தவறாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வாங்கிய கடனை வசூலிக்க வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தவறாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி பாமகவினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வாங்கிய கடனை வசூலிக்க வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தவறாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி பாமகவினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் புலியகுளம், காந்திபுரம், போத்தனூர் மற்றும் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் வசித்து வரும் பெண்கள், ஐடிஎப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ், அரைஸ், போன்ற பல்வேறு குறு, நிதி நிறுவனங்களில் முறையாக கடன் பெற்று அதனை மாததவனை முறையில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள, காரணத்தினால் மகளிர் குழு மூலமாக வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதனை பயன்படுத்தி பணம் வசூலிக்க வருகின்ற நிதி நிறுவன ஊழியர்கள் தங்களது வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து சுமார் ஐந்து மணி நேரங்களுக்கும் மேலாக பணம் வேண்டும் என்று தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் பணம் கொடுத்தால் தால் செல்வோம் என அராஜகம் செய்கின்றனர்.

மேலும், யாரை வேண்டும் என்றாலும் அழைத்து வாருங்கள், எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என தகாத வார்த்தைகளால் பெண்கள் என்றும் பாராமல் மிரட்டுவதாகவும், பணம் வந்தவுடன் கட்டுவதாக கூறினால், பணம் கட்ட முடியாத உங்களுக்கு எதற்கு கடன் என தவறான நோக்கத்தில் பேசுவதாகவும், பணம் கட்ட முடியவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளுங்கள், இன்சூரன்ஸ் மூலமாக தாங்கள் கட்ட வேண்டிய தொகையை கழித்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.



இதனை கண்டித்து, கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் குமார், புறநகர் மாவட்ட தலைவர் எம்.ஆர்.ரவி தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் கொரானா ஊரடங்கு காலத்தில் வேலையின்மை காரணமாக பணம் கட்ட இயலாத நிலையில் தொந்தரவு கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் மைக்ரோ நிதி நிறுவனங்களை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.



மேலும், கடந்த 7ம் தேதியன்று அராஜகம் செய்யும் நிதி நிறுவனங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதேநிலை நீடித்தால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் ராமசுந்தரம், இளைஞரணி மாநில துணை தலைவர் சோபியாராஜேஷ் மற்றும் மாவட்ட பொருளாளர் பிரமீளா, முன்னாள் ஜெயபால், சுப்ரமணி, முகமது அலி, அருண்குமார், சிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...