கோவை: மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா ஊரடங்கின் போது மத்திய அரசு வங்கி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் கடன் தவணை தொகைகளை கட்டுவதற்கான கால அவகாசம் வழங்கியது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வாங்கிய கடனை கட்டச்சொல்லி மகளிர் சுய உதவிக்குழுவினரை ஆபாசமாக பேசியும், மிரட்டியும் வசூல் செய்து வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
மேலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த போதிய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மூன்று முறைக்கு மேல் மாதர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் உடனடியாக பணத்தை செலுத்த கூறி காலை மற்றும் இரவு நேரகளில் கடன் பெற்றவர்களின் வீட்டிற்கு வந்து மிரட்டுவது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே, கோவையில் இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கடனை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கொரோனா ஊரடங்கின் போது மத்திய அரசு வங்கி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் கடன் தவணை தொகைகளை கட்டுவதற்கான கால அவகாசம் வழங்கியது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வாங்கிய கடனை கட்டச்சொல்லி மகளிர் சுய உதவிக்குழுவினரை ஆபாசமாக பேசியும், மிரட்டியும் வசூல் செய்து வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
மேலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த போதிய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மூன்று முறைக்கு மேல் மாதர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் உடனடியாக பணத்தை செலுத்த கூறி காலை மற்றும் இரவு நேரகளில் கடன் பெற்றவர்களின் வீட்டிற்கு வந்து மிரட்டுவது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே, கோவையில் இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கடனை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.