உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் பட்டபகலில் அமைச்சரின் உதவியாளரை கடத்திய மர்ம நபர்கள்..! போலீசார் விசாரணை

திருப்பூர்: உடுமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் உதவியாளரை உடுமலை சட்டமன்ற அலுவலக கட்டிடத்தில் பட்டபகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரின் உதவியாளரை உடுமலை சட்டமன்ற அலுவலக கட்டிடத்தில் பட்டபகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகவும் ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.



இவரது சொந்த உதவியாளராக இருந்துவருபவர் கர்ணன்.



இந்நிலையில், உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தபோது, காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் அமைச்சர் உதவியாளர் கர்ணனை அடித்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர், இது குறித்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் விசாரணை செய்து வருகிறார். அரசியல் காரணுங்களுகாகவா அல்லது சொந்த காரணத்திற்காக கடத்தப்பட்டாரா என் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே, உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளரை உடுமலையை அடுத்துள்ள தளி என்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...