கோவை: மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை எனவும் அத்திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளிவரும் என திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை: மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை எனவும் அத்திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளிவரும் என திரைப்பட
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆசிர்வாத் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று
நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசுகையில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா நடித்த மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை
எனவும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளிவரும் எனவும் திரையரங்கு திறந்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்
என்று தெரிவித்தார்.
அதேபோல, மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்திருப்பதாக கூறிய அவர், கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ளவர் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், திரையரங்குகளை திறக்கப்படவில்லை எனில் பலரும் கஷ்டப்படுவார்கள் என கூறிய அவர், திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என நம்புவதாக கூறினார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் உடனான திரைப்பட பணிகள் தற்போது தான் துவங்கியிருப்பதாகவும், மாஸ்டர் வெளியீட்டிற்கு பிறகு அப்படம் குறித்த அறிவிப்புகள் வருமெனவும்
அவர் தெரிவித்தார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆசிர்வாத் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று
நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசுகையில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா நடித்த மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை
எனவும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளிவரும் எனவும் திரையரங்கு திறந்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்
என்று தெரிவித்தார்.
அதேபோல, மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்திருப்பதாக கூறிய அவர், கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ளவர் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், திரையரங்குகளை திறக்கப்படவில்லை எனில் பலரும் கஷ்டப்படுவார்கள் என கூறிய அவர், திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என நம்புவதாக கூறினார்.
மேலும், நடிகர் கமல்ஹாசன் உடனான திரைப்பட பணிகள் தற்போது தான் துவங்கியிருப்பதாகவும், மாஸ்டர் வெளியீட்டிற்கு பிறகு அப்படம் குறித்த அறிவிப்புகள் வருமெனவும்
அவர் தெரிவித்தார்.