தமிழகத்தில் கால்நடை சந்தைகள் விரைவில் திறக்க முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - பொள்ளாச்சியில் கால்நடைத்துறை அமைச்சர்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.



மாக்கினாம்பாட்டி, கோலார்பட்டி, தென்குமாரபாலையம், சின்னாம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 65 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இதையடுத்து, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடையே பேசுகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கடந்த ஆண்டு 2,40,000 மகளிருக்கு தலா 25 நாட்டுக்கோழிகள், 15,000 மகளிருக்கு கறவை பசுக்கள், 1,50,000 மகளிருக்கு 6 லட்சம் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.



மேலும், தற்போது மூடப்பட்டுள்ள கால்நடை சந்தைகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி கால்நடை சந்தைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர், தமிழகத்தில் விடுபட்டுள்ள பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொடங்கியுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, நேற்றைய தினம் வரை 13 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.

மேலும், பி.டெக் உணவு தொழில்நுட்பம் பால்வள தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடத்திட்டத்தில் சேர 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...