கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

மாக்கினாம்பாட்டி, கோலார்பட்டி, தென்குமாரபாலையம், சின்னாம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 65 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடையே பேசுகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கடந்த ஆண்டு 2,40,000 மகளிருக்கு தலா 25 நாட்டுக்கோழிகள், 15,000 மகளிருக்கு கறவை பசுக்கள், 1,50,000 மகளிருக்கு 6 லட்சம் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

மேலும், தற்போது மூடப்பட்டுள்ள கால்நடை சந்தைகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி கால்நடை சந்தைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், தமிழகத்தில் விடுபட்டுள்ள பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொடங்கியுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, நேற்றைய தினம் வரை 13 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.
மேலும், பி.டெக் உணவு தொழில்நுட்பம் பால்வள தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடத்திட்டத்தில் சேர 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
மாக்கினாம்பாட்டி, கோலார்பட்டி, தென்குமாரபாலையம், சின்னாம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 65 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடையே பேசுகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கடந்த ஆண்டு 2,40,000 மகளிருக்கு தலா 25 நாட்டுக்கோழிகள், 15,000 மகளிருக்கு கறவை பசுக்கள், 1,50,000 மகளிருக்கு 6 லட்சம் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
மேலும், தற்போது மூடப்பட்டுள்ள கால்நடை சந்தைகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி கால்நடை சந்தைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், தமிழகத்தில் விடுபட்டுள்ள பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொடங்கியுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, நேற்றைய தினம் வரை 13 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.
மேலும், பி.டெக் உணவு தொழில்நுட்பம் பால்வள தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடத்திட்டத்தில் சேர 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.