கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கோவை: கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இருவரை கம்பத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இருவரை கம்பத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை அடுத்து பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா. இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களில் பின்னால் அமர்ந்து இருந்தவர், வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினத்தின் கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு தப்பி ஒட முயன்றுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வாகனத்தில் தப்பிக்க முயன்ற இளைஞர்களை பிடித்து கீழே தள்ளி, சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விசாரணையில் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப் மற்றும் ரத்துல் என்பது தெரியவந்தது. மேலும், இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...