கோவை: கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இருவரை கம்பத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை: கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இருவரை கம்பத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை அடுத்து பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா. இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களில் பின்னால் அமர்ந்து இருந்தவர், வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினத்தின் கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு தப்பி ஒட முயன்றுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வாகனத்தில் தப்பிக்க முயன்ற இளைஞர்களை பிடித்து கீழே தள்ளி, சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விசாரணையில் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப் மற்றும் ரத்துல் என்பது தெரியவந்தது. மேலும், இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அடுத்து பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா. இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களில் பின்னால் அமர்ந்து இருந்தவர், வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினத்தின் கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு தப்பி ஒட முயன்றுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வாகனத்தில் தப்பிக்க முயன்ற இளைஞர்களை பிடித்து கீழே தள்ளி, சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விசாரணையில் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப் மற்றும் ரத்துல் என்பது தெரியவந்தது. மேலும், இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.