கோவை: கோவையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை: கோவையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். அவரிடம் வருமானவரித்துறையினர் கடந்தாண்டு ஜீன் மாதம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
பின்னர், வீடு திரும்பிய பழனிசாமி காரமடை அருகேயுள்ள குளத்தில் சடலமாக கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக வழக்கு பதிவு செய்யக்கோரி வலியுறுத்தினர்.
இதனையடுத்து, பழனிச்சாமியின் உடற்கூறாய்வை, பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒரு மருத்துவரும், அரசு மருத்துவர்களும் இணைந்து செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் மருத்துவர், உடற்கூறாய்வு அறிக்கையை கொடுத்துவிட்டார். ஆனால், அரசு மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மூன்று மாதத்திற்குள் இவ்வழக்கை முடித்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டும், காலம் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி பழனிசாமி மனைவி, மகன் ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். அவரிடம் வருமானவரித்துறையினர் கடந்தாண்டு ஜீன் மாதம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
பின்னர், வீடு திரும்பிய பழனிசாமி காரமடை அருகேயுள்ள குளத்தில் சடலமாக கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக வழக்கு பதிவு செய்யக்கோரி வலியுறுத்தினர்.
இதனையடுத்து, பழனிச்சாமியின் உடற்கூறாய்வை, பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒரு மருத்துவரும், அரசு மருத்துவர்களும் இணைந்து செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் மருத்துவர், உடற்கூறாய்வு அறிக்கையை கொடுத்துவிட்டார். ஆனால், அரசு மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மூன்று மாதத்திற்குள் இவ்வழக்கை முடித்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டும், காலம் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி பழனிசாமி மனைவி, மகன் ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.