கொரோனோ பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலகங்களில் மனுநீதி முகாம்

கோவை: கோவையில் பதவி உயர்வு காலதாமதத்தால் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கொரோனோ பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலகங்களில் மனுநீதி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, திங்கட்கிழமை நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மனுநீதி நாள் முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் நேரடியாக ஆட்சித் தலைவரை சந்தித்து, மனுக்களை கொடுத்து வந்தனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில், மனுநீதி முகாம் நடத்தி, பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இதனையடுத்து, இன்று பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள், பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர். சமூக இடைவெளியுடன் நின்று பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...