புதுப்பிக்க வல்ல ஆற்றல்‌ துறையில்‌ மேம்பட்ட கல்வி மற்றும்‌ ஆராய்ச்சிக்காக உக்ரைன்‌ பல்கலைக்கழகத்துடன்‌ வேளாண்‌ பல்கலை.,‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ மெய்நிகர் வழியில்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகும்‌ நிகழ்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முதுகலைப்படிப்பு முதன்மையா்‌ முனைவர்‌. J.S கென்னடி வரவேற்புரை வழங்கினார்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ மெய்நிகர் வழியில்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகும்‌ நிகழ்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முதுகலைப்படிப்பு முதன்மையா்‌ முனைவர்‌. J.S கென்னடி வரவேற்புரை வழங்கினார்‌.



உக்ரைனிலுள்ள தேசிய உயிர்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைத்தலைவர்‌ பேராசிரியர்‌ B. காசுக்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர். பா.ஸ்ரீதா்‌ ஆகியோர்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்‌ பின்னணியைப்‌ பற்றி எடுத்துரைத்தனர்‌.

உக்ரைன்‌ பல்கலைக்கழகத்தின்‌ தலைவர்‌ பேராசிரிய நிக்கோலன்கோ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர் முனைவர். ந.குமார்‌ ஆகியோர்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிநடைபெற உள்ள கல்வி மற்றும்‌ ஆராய்ச்சிப்‌ பணிகளைப்‌ பற்றி உரையாற்றினர்‌. தற்போது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறை, உயிர்க்‌ கழிவுகளிலிருந்து ஆற்றல்‌ உற்பத்தி செய்யும்‌ ஆராய்ச்சிப்‌ பணிகளை மேற்கொண்டு வருகின்றது.



உக்ரைனிலுள்ள தேசிய உயிர் மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌, மின்‌ தொழில்நுட்பங்களின்‌ மூலம்‌ உயிர்க்கழிவுகளை முறைப்படுத்தும்‌ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்‌ மூலம்‌ ஆசிரியர்கள் மற்றும்‌ மாணவர்களின்‌ கல்வி மற்றும்‌ ஆராய்ச்சி தொடர்பான பணிகளை இருநாட்டினரும்‌ பரஸ்பரம்‌ மேற்கொள்ள இயலும்‌. மேலும்‌, இருநாட்டினருக்கும்‌ தேவையான ஆராய்ச்சித்‌ தொடா்பான விவரங்களின்‌ பரிமாற்றத்தால் விவசாயத்துறையில்‌ சீரிய வளர்ச்சியினை ஏற்படுத்த இயலும்‌. நிறைவாக, புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறையின்‌ தலைவர்‌ முனைவர்‌. ப.சுப்பிரமணியன்‌ நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...