உங்க ஊரில் உள்ள குளம், குட்டைகளை அடையாளம் காட்ட நீங்க ரெடியா..! நாங்கள் பராமரிக்கிறோம் - கோவை குளங்கள் அமைப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் குறிஞ்சி குளம், சிங்காநல்லூர் குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரிய குளம், வெள்ளலூர் குளம் என பெயர் சொல்லும் குளங்கள் இருக்கிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் குறிஞ்சி குளம், சிங்காநல்லூர் குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரிய குளம், வெள்ளலூர் குளம் என பெயர் சொல்லும் குளங்கள் இருக்கிறது. ஆனால், பெயர் சொல்லாத, நமக்கு அருகில் உள்ள பாரம்பரிய குளம், குட்டைகளை பராமரிக்க தவறி விட்டோம்.

அதன் விளைவாக ஊர்புறங்களில் குப்பை மேடுகளாகவும், ஆக்கிரமிப்பு பகுதிகளாகவும் காட்சியளிக்கிறது. ஒரு வேளை நீர்நிலைகளை பராமரித்து இருந்தால் இன்று பிளாட் போட்டு விற்கும் சைட்டுகளாக இல்லாமல் விவசாய நிலங்களாகவும், குடிநீர் பிரச்சினையின்றி நலமான வாழ்வை வாழ்ந்திருப்போம் என்கிறார் கோவை குளங்கள் அமைப்பை சேர்ந்த மணிகண்டன்.



நமது சுற்றுப்புறத்திலும், ஊர்களிலும் உள்ள குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் போதிய பராமரிப்பின்றி இருக்கும். மேலும், அவற்றின் பெயரும் கூட தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அதனால் நீங்கள் வசிக்கும் பகுதியில், கிராமத்தில், ஊரில் உள்ள குளமோ, குட்டையோ, தடுப்பணை, வாய்க்கால் போன்ற எந்த நீர்நிலை இருந்தாலும் அதன் லொகேஷன் லிங்க் மற்றும் அதன் பெயரை எங்களுக்கு வாட்ஸ் ஆஃப் செய்யலாம் அல்லது புகைப்படம், பஞ்சாயத்தின்/கிராமத்தின் பெயர், பரப்பளவு, நீர் வரும் வாய்க்கால் போன்றவற்றை விவரங்களாக எழுதி எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலையை பற்றிய தகவல்களை திரட்டி அவற்றை பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வசதியாக இருக்கும். மேலும் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையிடம் கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் போன்ற தகவல்களை கேட்டு இருக்கிறோம். அனைத்து நீர்நிலை தரவுகளும் சேர்ந்த பின் கூகுள் மேப் அப்டேட்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பின்னர் நீங்கள் அனுப்பி வைக்கப்படும் விவரங்கள் மூலமாக குளங்கள், குட்டைகளை நேரடியாக பார்வையிட்டு பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளோம். இதன் மூலம் கோவையில் உள்ள நீர்நிலைகளை மீட்டு வளம் பெற செய்வதே எங்களின் நோக்கம் என்று தெரிவித்தார்.

குளங்களின் விவரங்களை குறித்து தெரிவிக்க வேண்டிய எண் 9566538905 / [email protected]

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...