கோவையில் இட பற்றாக்குறை காரணமாக வெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு தொகுப்புகள்..! பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: கோவை கரும்புகடையில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதி நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு கிட்டுகளை வெட்ட வெளியில் கொட்டி வைக்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை கரும்புகடையில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதி நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு கிட்டுகளை வெட்ட வெளியில் கொட்டி வைக்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் முகக்கவசம், வைட்டமின் சி-மாத்திரைகள், ஆர்சனிக் அல்பம், கபசுரக்குடிநீர் பொடி அடங்கிய கிட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை கரும்புக்கடை, இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வந்த கொரோனா தடுப்பு கிட்டுகள் இட பற்றாக்குறை காரணமாக உரிய பாதுகாப்பின்றி சாலை ஓரத்திலேயே கொட்டி வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழங்கப்படும் கிட்டுகள் வெளியே வைக்கப்பட்டு உள்ளதால், மழை பெய்தால் கிட்டுகளை மழையில் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரேசன் கடை வெளியே சாலை ஓரத்திலேயே இந்த கிட்டுகளை கொட்டி வைத்துள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது, மண் தூசிகள் விழ வாய்ப்பு உள்ளதாகவும், வீணாகி போய் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்த அவர்கள், மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாக கூறப்படும் அரசு போதிய இட வசதிகள் செய்து தராததின் காரணமாக வீணாவதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...