கோவை: கோவை கரும்புகடையில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதி நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு கிட்டுகளை வெட்ட வெளியில் கொட்டி வைக்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை கரும்புகடையில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதி நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு கிட்டுகளை வெட்ட வெளியில் கொட்டி வைக்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் முகக்கவசம், வைட்டமின் சி-மாத்திரைகள், ஆர்சனிக் அல்பம், கபசுரக்குடிநீர் பொடி அடங்கிய கிட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை கரும்புக்கடை, இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வந்த கொரோனா தடுப்பு கிட்டுகள் இட பற்றாக்குறை காரணமாக உரிய பாதுகாப்பின்றி சாலை ஓரத்திலேயே கொட்டி வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழங்கப்படும் கிட்டுகள் வெளியே வைக்கப்பட்டு உள்ளதால், மழை பெய்தால் கிட்டுகளை மழையில் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரேசன் கடை வெளியே சாலை ஓரத்திலேயே இந்த கிட்டுகளை கொட்டி வைத்துள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது, மண் தூசிகள் விழ வாய்ப்பு உள்ளதாகவும், வீணாகி போய் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்த அவர்கள், மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாக கூறப்படும் அரசு போதிய இட வசதிகள் செய்து தராததின் காரணமாக வீணாவதாக குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் முகக்கவசம், வைட்டமின் சி-மாத்திரைகள், ஆர்சனிக் அல்பம், கபசுரக்குடிநீர் பொடி அடங்கிய கிட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை கரும்புக்கடை, இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வந்த கொரோனா தடுப்பு கிட்டுகள் இட பற்றாக்குறை காரணமாக உரிய பாதுகாப்பின்றி சாலை ஓரத்திலேயே கொட்டி வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழங்கப்படும் கிட்டுகள் வெளியே வைக்கப்பட்டு உள்ளதால், மழை பெய்தால் கிட்டுகளை மழையில் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரேசன் கடை வெளியே சாலை ஓரத்திலேயே இந்த கிட்டுகளை கொட்டி வைத்துள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது, மண் தூசிகள் விழ வாய்ப்பு உள்ளதாகவும், வீணாகி போய் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்த அவர்கள், மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாக கூறப்படும் அரசு போதிய இட வசதிகள் செய்து தராததின் காரணமாக வீணாவதாக குற்றம் சாட்டினர்.