கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: குற்றவாளிகள் 9 பேர் உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின், காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், இரண்டு பேர் மற்றும் மனோஜ் சாமி, உதயன், பிஜு குட்டி, ஜிதின் ஜாய், சதீசன், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி ஆகிய 9 பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள தீபு என்பவர் மட்டும் ஆஜராகாத நிலையில் இன்று 4 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.



இதனை தொடர்ந்து, சந்தோஷ் சாமி, சதிசன், ஜம்சீர் அலி ஆகிய 3 பேரை தவிர, மற்ற 6 பேரையும் கோவை மத்திய சிறைச்சாலைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...