திருப்பூர்: நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவிற்கு எதிராக திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவிற்கு எதிராக திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில் நடிகரும், அகரம் அறக்கட்டளையை சேர்ந்தவருமான நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக தனது அறிக்கையினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்து இளைஞர் முன்னணி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை கிழித்தும் அவற்றை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.
இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அவற்றை அப்புறப்படுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில் நடிகரும், அகரம் அறக்கட்டளையை சேர்ந்தவருமான நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக தனது அறிக்கையினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்து இளைஞர் முன்னணி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை கிழித்தும் அவற்றை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.
இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அவற்றை அப்புறப்படுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.