கோவை: கோவையில் சமையல் செய்யும் போது கவன குறைவால் தீ விபத்து ஏற்பட்டு வட மாநில பெண் மரணம். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்வர்கள் மனிஷ், கீதா தம்பதியினர். இவர்கள், கோவை திருச்சி சாலை ராஜலட்சுமி மில்ஸ் அருகே பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர்.
கோவை: கோவையில் சமையல் செய்யும் போது கவன குறைவால் தீ விபத்து ஏற்பட்டு வட மாநில பெண் மரணம். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்வர்கள் மனிஷ், கீதா தம்பதியினர். இவர்கள், கோவை திருச்சி சாலை ராஜலட்சுமி மில்ஸ் அருகே பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி டர்பன் ஆயில் தரையில் சிந்தியுள்ளது. அது, கீதாவின் உடையிலும் சிந்தியிருந்தது தெரியாமல், அவர் சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீதாவின் உடையில் தீ பற்றியது.
இதில், பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கீதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி டர்பன் ஆயில் தரையில் சிந்தியுள்ளது. அது, கீதாவின் உடையிலும் சிந்தியிருந்தது தெரியாமல், அவர் சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீதாவின் உடையில் தீ பற்றியது.
இதில், பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கீதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.