பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
பொள்ளாச்சி: நேற்றைய, மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், சமூக இடைவெளியை கடைபிடித்து, நோய் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், புரட்டாசி மாதம், முதல் நாள் மற்றும் மஹாளய அமாவாசை தினமான நேற்று கோவிலுக்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன், சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பரிசோதனைக்கு, பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த காலங்களில் அமாவாசை பூஜையில் கலந்து கொள்வதற்காக வரும் வெளியூர் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த முறை, நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் வெளியூர் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அமாவாசையன்று, இரவு கோயில் நடை மூடப்பட்டது. இதனால், வழக்கம்போல் பகல் நேரங்களில் மட்டும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், சமூக இடைவெளியை கடைபிடித்து, நோய் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், புரட்டாசி மாதம், முதல் நாள் மற்றும் மஹாளய அமாவாசை தினமான நேற்று கோவிலுக்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன், சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பரிசோதனைக்கு, பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், கடந்த காலங்களில் அமாவாசை பூஜையில் கலந்து கொள்வதற்காக வரும் வெளியூர் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த முறை, நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் வெளியூர் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அமாவாசையன்று, இரவு கோயில் நடை மூடப்பட்டது. இதனால், வழக்கம்போல் பகல் நேரங்களில் மட்டும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.