கோவை பெரியதாடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் ஜி.எஸ்.டி துறையினர் அதிரடி சோதனை..!

கோவை: கோவை பெரியதாடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் ஜி.எஸ்.டி துறையினர், இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பெரியதாடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் ஜி.எஸ்.டி துறையினர், இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



கோவை சின்னத்தடாகம், பெரியதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் தமிழ்நாடு உள்பட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இங்குள்ள செங்கல் சூளைகளில் இருந்து விற்பனை செய்யப்படும் செங்கல்களஉ ரிய செங்கல்களுக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்படுவதில்லை, என புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, இன்று அதிகாலை 6 மணியளவில் சோமையனூர், சின்னத்தடாகம், பெரியதடாகம், சாய்பாபா கோவில், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 25 இடங்களில் ஜி.எஸ்.டி. துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



இதில், பெரியதடாகம் பகுதியில் உள்ள கே.கே.ஜி. சேம்பர், விஷ்ணு சேம்பர், மணி சேம்பர், சோமையனூர் பகுதியில் உள்ள வி.கே.வி. பெட்ரோல் பங்க், செங்கல் சூளைகள், கவுண்டம்பாளையம், சாய்பாபா கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர் வீடுகள் என 25 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது.



6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த, சோதனையில், முறைகேடுகள் கண்டுபிடிக்கபட்டால் உரிமையாளர்களிடம் அபராதத்துடன் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும், என தெரிகிறது.

ஏற்கனவே, தடாகம் பகுதிகளில் முறையான அனுமதியின்றி பல செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கனிம வளத்துறையினரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஜி.எஸ்.டி. சோதனை அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...