கோவையில் தண்ணீர் வாளியில் விழுந்த 9 மாத குழந்தை பலி

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சிவராஜ் கார்டன் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, அபுல் உசேன் மற்றும் தர்ஷினிக்கு, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சிவராஜ் கார்டன் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, அபுல் உசேன் மற்றும் தர்ஷினிக்கு, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன் தினம், காலையில் எழுந்து பார்த்த பொழுது அவர்களது 9 மாத ஆண் குழந்தை காணாததை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் குழந்தையை பல இடங்களில் தேடி உள்ளனர்.

அப்போது, பாத்திரம் கழுவ வைத்திருந்த பக்கெட்டில் இருந்த தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின், தம்பதியினர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை, ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து, தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...