கோவையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
கோவை: கோவையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 9 ம் வகுப்பு படிக்கும், மாணவி காணாமல் போனதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில், மாணவியின் அலைபேசி சிக்னலை கொண்டு, அவர் திருப்பூர் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, அவருடன் இருந்த நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (20) என்பவர் மாணவியை திருமண ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.
இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், பிரசாந்த் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததும், ஒரு திருமண நிகழ்வின் போது, அவருக்கும், மாணவிக்கும்
பழக்கம் ஏற்பட்டுள்ளது, என தெரிவித்தார். அந்த மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்றதும், விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.