திருப்பூர்: ஜே.இ.இ., தேர்வில் திருப்பூரை சேர்ந்த, அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்று, அசத்தியுள்ளார்.
திருப்பூர்: ஜே.இ.இ., தேர்வில் திருப்பூரை சேர்ந்த, அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்று, அசத்தியுள்ளார்.
என்.ஐ.டி., ஐ.ஐ.டி., யில், பொறியியல் படிப் பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த சவுந்தர்யா என்ற மாணவி, கடந்த முதல் தேதி நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில், 77.9 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதன் மூலம், திருப்பூர் மாவட்ட அளவில், அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்ற பெருமையை, சவுந்தர்யா,
பெற்றுள்ளார்.
இவரது தாய், சரஸ்வதி மற்றும் ஆசாரி வேலை செய்து வரும், தந்தை வெள்ளிங்கிரி, மகளின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு வெற்றி குறித்து சவுதர்யா கூறுகையில்: தேர்வுக்கு மனப்பாடம் எதுவும் செய்யாமல் கருத்தை மட்டும் உள்வாங்கி படித்ததாகவும், மேலும் இத்தேர்வுக்காக தனிப்பயிற்சி மையங்களை அணுகவில்லை என தெரிவித்தார்.
"வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்தல் முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் பிளஸ் 2 வில், 427 மதிப்பெண் பெற்றேன். ஐ.ஐ.டி., யில் சேர்ந்து மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம்", என்றார் சௌந்தர்யா.
என்.ஐ.டி., ஐ.ஐ.டி., யில், பொறியியல் படிப் பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த சவுந்தர்யா என்ற மாணவி, கடந்த முதல் தேதி நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில், 77.9 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதன் மூலம், திருப்பூர் மாவட்ட அளவில், அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்ற பெருமையை, சவுந்தர்யா,
பெற்றுள்ளார்.
இவரது தாய், சரஸ்வதி மற்றும் ஆசாரி வேலை செய்து வரும், தந்தை வெள்ளிங்கிரி, மகளின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு வெற்றி குறித்து சவுதர்யா கூறுகையில்: தேர்வுக்கு மனப்பாடம் எதுவும் செய்யாமல் கருத்தை மட்டும் உள்வாங்கி படித்ததாகவும், மேலும் இத்தேர்வுக்காக தனிப்பயிற்சி மையங்களை அணுகவில்லை என தெரிவித்தார்.
"வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்தல் முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் பிளஸ் 2 வில், 427 மதிப்பெண் பெற்றேன். ஐ.ஐ.டி., யில் சேர்ந்து மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம்", என்றார் சௌந்தர்யா.