வட்டிக்கு வட்டி போட்டு வங்கிகள் வசூல்; தொழில் நிறுவனங்கள் மீண்டு எழ ரூ.1 லட்சம் அவசர கடன் வழங்க வேண்டும் - கோப்மா கோரிக்கை

கோவை: தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், பஞ்சாலைகள், சிறு, குறு தொழில்நிறுவனங்கள், கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், பைப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.


கோவை: தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், பஞ்சாலைகள், சிறு, குறு தொழில்நிறுவனங்கள், கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், பைப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள், இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மார்க்கெட்டாக, கோவை உள்ளது.கோவை மாவட்டத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன், காரணமாக வங்கி கடன்கள், வட்டிகள் என திரும்ப செலுத்த முடியாத நிலையில் தொழில் நிறுவனங்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கடனை செலுத்தாத நிலுவை தொகைகளுக்கு வட்டிக்கு வட்டி போட்டு வங்கிகள் வசூல் செய்கின்றன, என தொழில் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து, கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வங்கிகளில் தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கிய பல்வேறு கடன்களுக்கான வட்டிகளையும், அசலையும், கட்ட கால தவனை அளிக்கப்பட்டது. இதில், துவக்க காலத்தில் சரியான வழிக்காட்டுதல் இல்லாததாலும், வங்கிகளின் அலட்சியத்தாலும், கால அவகாசம் தவனை காலம் தொடர்பான விண்ணப்பிக்கும் முறை பலருக்கு தெரியாமல் போனது.

அப்போது, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பையும் மீறி வங்கிகள், இ.எம்.ஐ, கடன் உள்ளிட்டவற்றை வங்கி கணக்குகளில் இருந்து எடுத்துக்கொண்டன. அதன்பின், கால அவசாகம் அளிக்கப்பட்டது. தற்போது, கால அவசாகம் அளித்த நாட்களில் இ.எம்.ஐ, கடன்கள் உள்ளிட்டவை செலுத்தாதவர்களிடம் அதற்கான வட்டி, வட்டிக்கு வட்டி என கந்து வட்டியை விட மோசமாக வங்கிகள் வசூல் செய்கின்றன.

இது தொடர்பாக, மத்திய அரசு தாமாக முன் வந்து கொள்கை முடிவு எடுத்து ரிசர்வ் வங்கி மூலம் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர, அனைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் ரூ.1 லட்சம் கடன் அவசரமாக வழங்க வேண்டும். குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்காவது, வங்கி கடன்கள், வட்டிகள் உட்பட அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும். இல்லை என்றால் பல ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...