ஊட்டசத்து மாதம்: கோவையில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைப்பு

கோவை: நாடு முழுவதும் இம்மாதம் ஊட்டசத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.


கோவை: நாடு முழுவதும் இம்மாதம் ஊட்டசத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட, மாவட்ட அலுவர் மீனாட்சி கூறும் போது, வீடுகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைப்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஊட்டசத்து மிகுந்த காய்கறிகள் சத்து கெடாமல் கிடைக்கிறது.

குறிப்பாக, காய்கறிகளில் உள்ள நுண் ஊட்டசத்துகள் முழுமையாக கிடைக்கிறது. வீட்டு தோட்டம் அமைத்தால் சத்து மிகுந்த காய்கறிகள் கிடைப்பதுடன், உடல் உழைப்பும் அதிகரிக்கிறது. இதனால், மன அழுத்தம் குறைகிறது. வீட்டு தோட்டத்தினால், நமது பாரம்பரிய பழக்கத்தை வருங்கால தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியும்.



கீரைகளில் இரும்பு சத்து உள்ளதால் அனைத்து பயனாளிகளின் வீடுகளிலும் மலை கீரைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மீனாட்சி கூறினார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...