கோவை: நாடு முழுவதும் இம்மாதம் ஊட்டசத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
கோவை: நாடு முழுவதும் இம்மாதம் ஊட்டசத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட, மாவட்ட அலுவர் மீனாட்சி கூறும் போது, வீடுகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைப்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஊட்டசத்து மிகுந்த காய்கறிகள் சத்து கெடாமல் கிடைக்கிறது.
குறிப்பாக, காய்கறிகளில் உள்ள நுண் ஊட்டசத்துகள் முழுமையாக கிடைக்கிறது. வீட்டு தோட்டம் அமைத்தால் சத்து மிகுந்த காய்கறிகள் கிடைப்பதுடன், உடல் உழைப்பும் அதிகரிக்கிறது. இதனால், மன அழுத்தம் குறைகிறது. வீட்டு தோட்டத்தினால், நமது பாரம்பரிய பழக்கத்தை வருங்கால தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியும்.

கீரைகளில் இரும்பு சத்து உள்ளதால் அனைத்து பயனாளிகளின் வீடுகளிலும் மலை கீரைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மீனாட்சி கூறினார்.
இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட, மாவட்ட அலுவர் மீனாட்சி கூறும் போது, வீடுகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைப்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஊட்டசத்து மிகுந்த காய்கறிகள் சத்து கெடாமல் கிடைக்கிறது.
குறிப்பாக, காய்கறிகளில் உள்ள நுண் ஊட்டசத்துகள் முழுமையாக கிடைக்கிறது. வீட்டு தோட்டம் அமைத்தால் சத்து மிகுந்த காய்கறிகள் கிடைப்பதுடன், உடல் உழைப்பும் அதிகரிக்கிறது. இதனால், மன அழுத்தம் குறைகிறது. வீட்டு தோட்டத்தினால், நமது பாரம்பரிய பழக்கத்தை வருங்கால தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியும்.
கீரைகளில் இரும்பு சத்து உள்ளதால் அனைத்து பயனாளிகளின் வீடுகளிலும் மலை கீரைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மீனாட்சி கூறினார்.